ஈரோடு, மார்ச் 3: தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள், காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குசாவடிகளில், ஆசிரியர்கள் உள்ளிட்ட 13,157 அரசு அலுவலர்கள், 2,415 வாக்குசாவடி நிலை அலுவலர்கள், 1201 காவல்துறை அலுவலர்கள் மற்றும் 1540 முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.