மேல் சாதி, கீழ் சாதின்னு மக்களை பிரிக்கிறதை ஒழிக்கனும்: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்’னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் விமர்சனம் பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.

கோயில்ல மட்டும் இல்ல, சமூகத்துலயும் எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி – கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் – அம்பேத்கர் – அண்ணா – கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, சமத்துவமின்மையையும் அடக்குமுறையையும் கடுமையா எதிர்ப்போம் . ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: