பெண்ணை தாக்கியவர் கைது

நாகை, மார்ச் 2: நாகை செம்மரக்கடை வடக்கு தெருவை சேர்ந்தவர் தாதாஷரிப். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரிஹானா சமின் (40). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ரிஹானாசமின் வீட்டின் மாடியில் யாசர் அராபத் (35) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று யாசர் அராபத்  தனது இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வருமாறு ரிஹானாசமினியிடம் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் சமையல் அறையில் இருந்த குக்கரை எடுத்து ரிஹானாசமின் தலையில் யாசர் அராபத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ரிஹானாசமின் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாகை டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து யாசர் அராபத்தை கைது செய்தனர்.

Related Stories: