தா.பழூர் அருகே சிகிச்சை பலனின்றி முதியவர் சாவு

தா.பழூர் மார்ச் 1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அர்த்தணேரி பேருந்து நிழற்குடை யில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அப்பகுதியே வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவர் நேற்று பகல் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அணைக்குடம் கிராம நிர்வாக அலுவலர் அனிதா கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: