நெல்லை, மார்ச் 1: சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என தென்மண்டல அனைத்து சங்கங்களின் கலை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்மண்டல அனைத்து சங்கங்களின் கலை கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. வண்ணார்பேட்டையில் நடந்த இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக் குழு உறுப்பினருமான பொன்பாண்டி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் தோட்டகுடி மாரியப்பன் முன்னிலை வகித்தார். காளிதாசன் இறைவணக்கம் பாடினார். வேலவன் சங்கீதா வரவேற்றார். துணைத்தலைவர் கலையரசன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.