சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் அவசரகால கதவைத் திறந்து வெளியேறிய பயணி பரபரப்பு

சென்னை: ஷார்ஜாவில் இருந்து வந்து சென்னையில் தரையிறங்கிய, ஏர் அரேபியா விமானத்தின் அவசர கால கதவை திறந்து, குதித்து ஓடிய பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. ஓடுபாதையின் அருகே விமானம் நின்றதால் லாகூரில் இருந்து வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. பிடிபட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த நஜ்முதீன், தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதால் தப்பிக்க முயன்றதாக கூறியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: