டெல்லி: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனும், தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளியுமான சலீம் டோலாவை கைது செய்த துருக்கி அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியது. துருக்கி உளவு அமைப்புகளின் உதவியுடன் பிடிபட்ட சலீமிடம், இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்களின் செயல்பாடுகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
