ஏரல், பிப்.24: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றிருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். சாயர்புரம் வங்கி தலைவர் அறவாழி முன்னிலை வகித்தார். வங்கி செயலர் சகுந்தலாதேவி வரவேற்றார். இதில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு பயிர் கடன் பெற்றிருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வங்கி பேசினார்.