சீரமைப்பு பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பொன்னை ஆற்றுப்பாலம் அதிகாரிகள் அலட்சியத்தால் மாணவிகள் அவதி

பொன்னை, பிப்.21: பொன்னை ஆற்றுபாலம் சீரமைப்பு பணிகள் முடிந்தும் பஸ் பயன்பாட்டிற்கு திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்சி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொன்னை ஆற்றுப்பாலம் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் சேதமடைந்தது. இதையடுத்து, பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்ததும் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பாலம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதிமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், நாளை வள்ளிமலை முருகன் கோயிலில் மாசி மாத தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, பஸ் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்பட்டு வருகின்றனர். இதனால், 2 கி.மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதுகுறித்து கடந்த 8ம் தேதி வள்ளிமலை முருகன் கோயிலில் ஆர்டிஓ கணேஷிடம் பொதுமக்கள் முறையிட்டும் அலட்சிய போக்கில் உள்ளதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆற்று பாலத்தில் பஸ் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: