கோவில்பட்டி, பிப்.21: கோவில்பட்டி சத்யபாமா திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 448 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 210 பேருக்கு உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் இனங்கள், 300 பேருக்கு உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் இனங்கள், 25 பேருக்கு நகர நிலவரி திட்டம் பட்டா இனங்கள், 138 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, 32 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 736 பேருக்கு மகளிர் திட்டம் மூலம் நலத்திட்ட உதவிகள், 20 பேருக்கு சமூக நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள், உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் 26,395 பேருக்கு 2 ஜி.பி. டேட்டா வழங்கும் திட்டத்தில் சிம்கார்டு வழங்குதல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் 482 ஏழை பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கம் வழங்குதல், அம்மா இருசக்கர வாகனம் வழங்குதல் என மொத்தம் 29 ஆயிரத்து 786 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.