பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், பிப். 19: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ நிர்வாகி பழனிசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு காஸ் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: