மும்பை: டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குனராகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக கேம்ப்பெல் வில்சன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். விமான நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தலைமை பொறுப்பை ஒப்படைப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று கேம்ப்வெல் ஊழியர்களிடம் நேற்று தெரிவித்தார்.
