ஜெயங்கொண்டம், ஏப்.8: அரியலூர் மாவட்டம் திருமழபாடி ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் முந்தைய சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எல்இடி திரை வாகனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 40 சதவீதத்துக்கும் மேல் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்துவது தொடர்பான விவரங்களையும் மாவட்டத்திற்குட்பட்ட முதல் நிலை வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தைவலியுறுத்தியும் அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இந்த விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா, சி விஜில் ஆப்பில் தேர்தல் விதிமீறல் குறித்த புகார் செய்வது தொடர்பான விளக்கம் மற்றும் எனது வாக்கு, எனது இந்தியா, வாக்குச்சாவடி அமைவிடம், வாக்காளர் பட்டியலில் பெயர் விவரம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக தெரிந்து கொள்வது, வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்லநமது ஜனநாயக உரிமை ,போன்ற குறும்படங்கள் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒளிபரப்பப்பட்டன இந்த விழிப்புணர்வு குறும்படங்களை ஏராளமாேர் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.
திருமழபாடி ஊராட்சியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி எல்இடி திரை வாகனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு
- திருமசாபதி உராட்சி
- Jayankondam
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
- அரியலூர் மாவட்டம் திருமசாபாடி ஊராட்சி
- அரியலூர் மாவட்டம் அரியலூர்
- ஜெயங்கொண்டம்
