நாளை முதல் விமான கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

 

டெல்லி: நாளை முதல் விமான கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. விமான எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதை அடுத்து விமான கட்டணம் உயர்வு என விளக்கம் அளித்துள்ளது. டிக்கெட் கட்டணத்தில் எரிபொருள் சர் சார்ஜாக வசூலிக்கப்படும் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் உயர்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் 99.4 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் விமான எரிபொருள் விலை 195.19 டாலராக அதிகரித்துவிட்டது.

Related Stories: