கொள்ளிடம், ஏப்.5: கொள்ளிடம் அருகே புத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதியதாக ரூ.625 லட்சம் மதிப்பீட்டில் புதிய பணிமனை கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் பெற்றோர் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரில் சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். அனைத்து பட்டய வகுப்புகளும் இங்கு நடைபெற்று வருகின்றன. மிகவும் சிறப்பு வாய்ந்த கல்லூரியாக இருந்து வருகிறது. இங்கு வருடம்தோறும் நடைபெறும் கேம்பஸ் இண்டர்வியூவில் மாணவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பல நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
