காரைக்குடி, பிப்.19: காரைக்குடி நகராட்சிக்கு சொந்தமான இனங்களுக்கான கட்டண வசூல் உரிமை ரூ.67 லட்சத்திற்கு ஏலம் போனது. காரைக்குடி நகராட்சிக்கு சொந்தமான இனங்களுக்கான ஏலம் நகரமைப்பு அலுவலர் மாலதி, மேலாளர் குமார், வருவாய் ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், சக்திபாலன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் அண்ணா தினசரி கடைகளில் கட்டணம் வசூல், பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பஸ்களுக்கு தினசரி கட்டண வசூல், ஆடு அடிக்கும் தொட்டியில் தினசரி கட்டணம் வசூல், பழைய பஸ்ஸ்டாண்டு பூ விற்பனை செய்யும் உரிமை, சாலை ஓரங்களில் தற்காலிக கடை வைத்துள்ளவர்களிடம் கட்டணம் வசூல் செய்தல், முடியரசன் சாலையில் உள்ள நகராட்சி பூங்காவில் கட்டணம் வசூல் மற்றும் கல்லுக்கட்டி மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டணம் வசூல் செய்தல் ஆகிய இனங்களுக்கான ஏலம் நடந்தது.