தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி வலியுறுத்தல் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நன்றி

பட்டுக்கோட்டை,பிப்.17: தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட்ட பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டுக்கோட்டையில் பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக பட்டுக்கோட்டை நகர தலைவர் ராஜாபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் குருமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் மோகன்பிரபு, மற்றும் குழந்தைசேசு, முருகையன், கண்ணுசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: