பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, பிப்.17:  சிவகங்கை அரண்மனைவாசல் முன் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் சசிவர்ணம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, சிஐடியு மாவட்ட செயலாளர் வீரையா கண்டன உரையாற்றினர். மாவட்ட பொதுச்செயலாளர் விஜயக்குமார், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன், சிவாஜி மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: