ஆர்.எஸ்.எஸ். தலைவர் இன்று கோவை வருகை

கோவை, பிப்.17: ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகாவத் இன்று விமானம் மூலம் கோவை வருகிறார். இன்று மாலை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். வடவள்ளியில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரின் வீட்டில் தங்கும் இவர், நாளை கொடிசியாவில் தொழில் நிறுவனத்தினர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளார்.

வரும் 19ம் தேதி இவர், விமானம் மூலம் மும்பை செல்கிறார். மோகன் பகாவத் வருகையை முன்னிட்டு நகரில் சுமார் 500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர், பங்கேற்கவுள்ள விழாக்கள் மற்றும் அவர் தங்கியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: