கோவை, பிப்.17: ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகாவத் இன்று விமானம் மூலம் கோவை வருகிறார். இன்று மாலை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். வடவள்ளியில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரின் வீட்டில் தங்கும் இவர், நாளை கொடிசியாவில் தொழில் நிறுவனத்தினர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளார்.