சென்னை: அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க நினைத்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் ‘மூச்சுத்திணறல் – உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்தனர்’ என பழனிசாமி சொன்ன அபாண்டப் பொய் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். குற்றவாளிகளைக் காப்பாற்ற அன்று பொய் சொன்ன பழனிசாமியும் ஒருவகையில் குற்றவாளிதான். பொய் சொல்லி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
