நாகர்கோவில், பிப்.12: குமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ‘பேக்கேஜ்’ டென்டர் முறைக்கு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் கூட்டம் நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டமைப்பு தலைவராக திருவட்டார் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், செயலாளராக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய குழு தலைவர் அழகேசன், பொருளாளராக குருந்தன்கோடு ஒன்றிய குழு தலைவர் அனுஷாதேவி, துணைத் தலைவராக மேல்புறம் தலைவர் ஞானசவுந்தரி, துணை செயலாளராக தோவாளை ஒன்றிய குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், செயற்குழு உறுப்பினர்களாக தக்கலை தலைவர் அருள் ஆன்டனி, முன்சிறை தலைவர் ராஜேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜாக்கமங்கலம் தலைவர் ஐயப்பன், கிள்ளியூர் தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.