சேலம், மார்ச் 12: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. ஊழியர்கள் குறித்து விரோத போக்கில் ஈடுபட்டு வரும் சேலம் மாவட்ட இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராக செயல்படும் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டரிடம் முறையிட்டு கடிதம் வழங்கப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அனைத்து வட்ட கிளைகளில் இருந்தும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. புகார் மீது தக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும், இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் 16ம் தேதி மாலை நேர பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜான் ஆஸ்டீன், தலைவர் கோவிந்தராஜ், பொறியாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் போராட்டம்
- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- சேலம்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் சங்கம்
