தஞ்சை, பிப்.11: தஞ்சாவூர் வழியாகச் சென்ற அணைத்து ரயில்களும் மீண்டும் இயக்க வலியுறுத்தி நாளைமறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக ரயில்கள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு பேருந்துகள் உள்ளிட்ட பயணிகள் இயக்கம் முழுமையாக இயக்கப்படும் நிலையில் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் அன்றாடம் வேலைசெய்வோர், ஏழை,எளிய , நடுத்தர மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் , மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர், படிக்க செல்லும் மாணவ -மாணவியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ரயில்கள் இயக்கப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நிலையில் சுமார் 50 பேருந்துகளின் தேவையை ஒரு ரயில் இயக்கம் பூர்த்தி செய்கிறது. கட்டண குறைவும், பாதுகாப்பான பயணமும் ரயில்கள் இயக்கத்தில் உள்ளது.