பொதுமக்கள் அவதி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேண்டுகோள் திருமயம் அருகே பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி

திருமயம், பிப். 11:  சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துப்பாண்டி (21). இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி சாலையோர பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து கடையில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். திருமயம் மானாமதுரை பைபாஸ் சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த தகவல் கிடைத்ததும் திருமயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துப்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: