சீர்காழி, பிப். 11: மணல்மேட்டில் இருந்து சீர்காழி வழியாக சென்னைக்கு இயக்கிய அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சீர்காழி அருகே மணல்மேட்டில் இருந்து வைத்தீஸ்வரன்கோவில் சீர்காழி வழியாக சென்னைக்கு 2016ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டெப்போவில் இருந்து இயக்கப்பட்டு வந்த தடம் எண் 142 அரசு பேருந்து திடீரென கடந்த 12 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.