கரூர், பிப். 11: ஏமூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் குடோனில் ரூ.15 லட்சம் அளவில் சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்து மோசடி நடைபெற்றதாக வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம், ஏமூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளது. இந்த குடோனில் கடந்த மாதம் சேலம் மண்டல அதிகாரியாக பணியாற்றி வரும் சிவராமகிருஷ்ணன் என்பவர் ஆய்வு மேற்கொண்டார்.