100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கலெக்டர் தகவல்

கரூர், மார்ச் 28: கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலருகளுக்கு இன்று 28 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி வகுப்புகள் கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வெண்ணமலை.

அரவக்குறிச்சிசட்டமன்ற தொகுதிக்கு வள்ளுவர் மேலாண்மை கல்லூரி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி, குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்.

 

Related Stories: