நாமகிரிப்பேட்டை, பிப்.11: நாமகிரிப்பேட்டையில் நேற்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி ரக மஞ்சள் 250 மூட்டை, உருண்டை மஞ்சள் 80 மூட்டை, பனங்காலி 10 மூட்டை என மொத்தம் 330 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.