திருச்செங்கோடு அருகே, எல்.இ.டி மூலம் கொரோனா விழிப்புணர்வு

திருச்செங்கோடு, பிப்.11: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் வட்டாரத்தில் நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில், கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் எல்இடி திரை அமைக்கப்பட்ட வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவும் முன், தடுக்கும் வழிமுறைகளை விளக்கும் பிரசார வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாணிக்கம்பாளையம், சாணார்பாளையம், குமரமங்கலம், எலச்சிபாளையம், பெரியமணலி மற்றும் வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எல்இடி திரை பொருத்தப்பட்ட வாகனம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாணிக்கம்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகரன், மருத்துவர்கள் லோகநாதன், பிரியதர்ஷினி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, பாலுச்சாமி, ரவிச்சந்திரன் மற்றும் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: