நாகர்கோவில்: வடசேரி பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.10 கோடி கடன் மோசடி செய்த அதே வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கமான அடகு நகைகள் பரிசோதனையின் போது, பல போலி நகைகள் இருப்பது தெரியவந்து விசாரணை நடத்தியதில் மோசடி அம்பலமாகியுள்ளது.
