இலங்கை கடற்படையினர் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த மீன்பிடி படகை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அப்போது படகிலிருந்து ரூ.510 கோடி மதிப்புள்ள 102 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 6 பேரை மீன்பிடி படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரத்தில் நேற்று ரூ.100 கோடி போதைப்பொருள் சிக்கிய நிலையில் இலங்கை கடற்பகுதியிலும் போதைப்பொருள் கைப்பற்றியது.
