குளத்தூர்,பிப்.10: தருவைகுளம் புனித நிக்கோலாசியார் திருவிழாவையொட்டி அசனவிருந்து நடந்தது. குளத்தூர் அருகே தருவைகுளம் புனிதநிக்கோலாசியர் ஆலய திருவிழாவையொட்டி தருவைகுளம் கிராம பொதுமக்கள் சார்பில் அசனவிருந்து நடந்தது. இதில் பங்குதந்தை எட்வர்ட் ஜே, சர்ச்சில் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை, ஆராதனையை அடுத்து அசன விருந்தை தொடங்கி வைத்தனர். இதில் தருவைகுளம் மற்றும் அனைந்தமாடன்பச்சேரி, பட்டினமருதூர், வேப்பலோடை, வெள்ளப்பட்டி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மீனவர்கள் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.