சாத்தூர், பிப். 10: சாத்தூரில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால், விரக்தியடைந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
சாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த சந்திரகாந்த் (32), கூலித்தொழிலாளி. மனைவி சாந்தி (30). இவர்களுக்கு 7 வயது மகள் உள்ளார். குடிப்பழக்கத்துக்கு ஆளான சந்திரகாந்த், தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.