அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை நிறுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆஜராகி, ‘‘ சிபிஐ குற்றப்பத்திரிகையில் டிஎஸ்பி, மனுதாரர் உள்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட மனுதாரர் உட்பட 4 பேரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க வேண்டி வரும் என நீதிபதி கூறியுள்ளார்.

இதனால் மனுதாரர் கைது செய்யப்படலாம் என அச்சப்படுகிறார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, முன்ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ மார்ச் 12ல் பதில்மனு தாக்கல் செய்யவும், அதுவரை வழக்கு விசாரணையை தலைமை குற்றவியல் நீதிபதி நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: