திண்டுக்கல், பிப்.10: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன், திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் கடந்த 2012ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.