திருவாரூர், பிப்.10: திருவாரூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் 8வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 18 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் ஆதிசேஷையா கமிட்டியினை ரத்து செய்திட வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருவாரூரில் 8வது நாளாக நேற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.