 கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா

கோவை,பிப்.10: கோவைப்புதூர்  கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 31வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். இதில் அடல் இன்னவேஷன் மிஷன் இயக்குநரும், மத்திய அரசின் நிதி ஆயோக் கூடுதல் செயலாளருமான ரமணன் ராமநாதன் பெங்களூரு அல்ட்ரான் இந்தியா வர்த்தக மேலாண்மை தலைவர் மாத்தூர் பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

விழாவில் 956 இளநிலை, 147 முதுநிலை பட்டப்படிப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல 5 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சிறந்த மதிப்பெண் மற்றும் பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவ மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணா கல்வி குழும முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், முதல்வர் சீனிவாச ஆளவந்தார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: