சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

புதுக்கோட்டை, பிப். 10: சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி புதுக்கோட்டை மண்டல புதிய பஸ் நிலைய வளாகத்தில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம், சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. பொது மேலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். நகர துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மகா சுந்தர் பேசினார். முன்னதாக போக்குவரத்து கழக துணை மேலாளர் சுப்பு வரவேற்றார். நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மோகன்ராஜ், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: