அரசிராமணியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

இடைப்பாடி, பிப்.9: இடைப்பாடி  அருகே அரசிராமணி பேரூராட்சியில் குள்ளம்பட்டி அலெக்சாண்டர் கிரிக்கெட்  குழு மற்றும் இளம்சிங்கம் கிரிக்கெட் குழு சார்பில், மாநில அளவில் மின்னொளி  கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள்  கலந்துகொண்டு விளையாடின. இதில் முதல் பரிசாக ₹15,021 ரொக்கம் மற்றும்  சுழற்கோப்பை ஆலச்சம்பாளையம் மணி பிரதர்ஸ் அணி வென்றது.

இரண்டாம் பரிசாக ₹10,021 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை குள்ளம்பட்டி அணி வென்றது. வெற்றி  பெற்ற அணிகளுக்கு அரசிராமணி அதிமுக பேரூர் செயலாளர் காளியப்பன், அம்மா  பேரவை நகர செயலாளர் பெருமாள், பேரூர் அவைத்தலைவர் குமாரசாமி, தகவல்  தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் யுவராஜா, அரசிராமணி பேரூர்  பொருளாளர்  ராமச்சந்திரன் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.  இதில் நிர்வாகிகள் முத்துவேல், பாலமுருகன், கவுதம், முருகேசன், கொமதேக  மாவட்ட செயலாளர் ராஜ்குமார், நெசவாளரணி மாவட்ட துணை அமைப்பாளர்  வெங்கடாசலம், சிவப்பிரகாசம், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ..

Related Stories: