தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்

தேனி, பிப். 9: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மூன்று தலைமுறைகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. தலைசிறந்த முதன்மை செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர் திருச்சுழி, டாக்டர் ரதீன் பங்கேற்று தம்பதிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் பங்கேற்ற தம்பதிகளுக்கு ஐயுஐ மற்றும் ஐவிஎப் சிகிச்சைகளுக்கான தொகையில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: