காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்திட புதியதாக கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள பாதுகாப்பு கிடங்கினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் தேர்தலுக்காக வாக்குசாவடிகளில் வாக்களிக்க பயன்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திட புதியதாக பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1949 சதுர மீட்டர் முழு பரப்பளவில் கிடங்கு கட்டப்பட்டுள்ளது.