திருப்பூர், பிப். 8: திருப்பூர் தி.மு.க. மத்திய மாவட்டத்திற்குட்பட்ட வடக்கு மாநகரத்தில், காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற தலைப்பில் மாற்று கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைபவர்களை வரவேற்கும் விழா நடந்தது. அ.தி.மு.க, பா.ஜ., இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிசத், ரஜினி மக்கள் மன்றம், தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளில் இருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் திருப்பூர் தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் ஏற்பாட்டில், தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.