கடலூர், பிப். 8: கடலூர் மத்திய சிறையில் நேற்று அதிகாலை டிஎஸ்பி தலைமையில் 100 போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. கடலூர் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தடை செய்யப்பட்ட செல்போன் உபயோகம் மற்றும் பொருட்கள் பயன்பாடு குறித்து புகார்கள் வந்தது. இதையடுத்து எஸ்பி அபிநவ் உத்தரவின் பேரில் நேற்று அதிகாலை டிஎஸ்பி சாந்தி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100 போலீசார் சிறைக்குள் அதிரடி சோதனை நடத்தினர்.