கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே நவீன சுகாதார வளாகம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், பிப். 5: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே நவீன பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் லைட்ஹவுஸ் கார்னர் வழியாக பேருந்து நிலையம் சென்று வருகிறது. லைட்ஹவுஸ் கார்னர் நிறுத்தத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மக்கள் நலன் கருதி இப்பகுதியில் பொது சுகாதார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுநல ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், இக்கோரியில் தனிக்கவனம் செலுத்தி லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: