திருவோணத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் போராட்டம்

ஒரத்தநாடு, பிப்.20: திருவோணத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், காலம் முறை ஊதியம் மற்றும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் தலைவர் போத்தியப்பன், செயலாளர் சரவணகுமார், பொருளாளர் சுரேஷ், மகளிர் அணி தலைவி அதிர்ஷ்டலட்சுமி மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

 

Related Stories: