துப்பாக்கி சுடும் போட்டியில் ஈரோடு போலீஸ் முதலிடம்

ஈரோடு, பிப்.5: தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்தது. அதில், கோவை மண்டலம் சார்பில் பங்கேற்ற போலீசார் மாநில அளவில் ரைபிள் மற்றும் கார்பைன் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 2வது இடத்தை பிடித்தனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஐ. மணி, போலீஸ்காரர் பிரகாஷ் ஆகியோர் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர். இன்ஸ்பெக்டர் தீபா, பெண் போலீஸ் குமுதா ஆகியோர் 2வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தையும், போலீஸ்காரர்கள் சங்கரன், சிவராஜ், ரிசாத் ஆகியோர் 3வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற போலீசாரையும், பயிற்சியளித்த எஸ்.ஐ. ரமேசையும் ஈரோடு மாவட்ட எஸ்.பி.தங்கதுரை பாராட்டினார்.

Related Stories: