சென்னை, பிப். 5: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் நேற்றுமுன்தினம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு விடுத்த கோரிக்கை: மன்னார்புரம் அருகே திருச்சி 4 லேன் சாலை மேம்பால திட்டம் 2011ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் நகரத்திற்குள் நுழையாமல் திருப்பி விடுவதற்கு சாலை மேம்பால திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதன் முதல்கட்ட பணி 2018ம் ஆண்டில் நிறைவடைந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இருப்பினும், மத்திய பாதுகாப்பு துறையின் 0.66 ஏக்கர் நிலம் மாற்றம் செய்து தருவதில் தாமதம் ஏற்பட்டதால், மிக முக்கியமான சென்னை செல்லும் சாலையின் ஒரு இணைப்பு பகுதி முழுமை அடையாமல் இருந்து வந்தது.இதனால் 2ம் கட்டம் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.