தேவையானவை:
கோதுமை ரவை – 1 கப்
சர்க்கரை – அரை கப்
பாதாம் – 8
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை:
நெய்யைக் காயவைத்து பாதாமை பொடியாக நறுக்கிப் போட்டு வறுத்தெடுங்கள். மீதமுள்ளநெய்யில் கோதுமை ரவையை வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையில் கால் கப்தண்ணீர் சேர்த்து, பாகு வைத்து பிசுக்கு பதம் வந்ததும், ரவை, பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி,உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள்.
