திருவாரூர், பிப்.4: காப்பீட்டுத் துறையில் 49 சதவீதமாக இருந்து வரும் அந்நிய முதலீட்டினை 74 சதவீதமாக உயர்த்துவதற்கு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று எல்ஐசி அலுவலகம் முன் எல்ஐசி ஊழியர் சங்கத்தினர், அகில இந்திய முகவர் சங்கத்தினர் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர் சங்க தலைவர் சித்தார்த்தன் தலைமையிலும், செயலாளர் கமலவடிவேல் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்க கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.