நீலகிரி: உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல் மோட்டார் படகுகளுக்கு பதிலாக படகு சவாரிக்கு மின் மோட்டார் படகுகள் பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஐகோர்ட்டில் உறுதியளித்துள்ளது. ஏரியில் பெட்ரோல் மோட்டார் படகுகளின் ஒலி மாசு காரணமாக வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அடர்ந்த வனப்பகுதிக்குள் படகு சவாரி நடத்தப்படுவது இல்லை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
